மதுரை தமிழிலக்கிய மின்தொகுப்புத் திட்டம்
காலப்போக்கில் தமிழ் நூல்கள் தடம் தெரியாமல் மாய்ந்துவிடப்போகிறது
என்னும் அச்ச மேலீட்டிற்கு முடிவுகட்டும் முகத்தான் அமையப்பெற்ற தளம் தான் மதுரை தமிழ்
இலக்கிய மின்பதிப்புத் திட்டம். உலகளாவிய தமிழர்களை
ஒன்றினைக்கும் களமாகத் திகழ்ந்து வருகிறது.
எந்த ஒரு இனத்தின் கலாச்சாரத்தினையும் அறிந்துகொள்வதற்கு வித்தாக அமைவது இலக்கியங்கள். அவ்விலக்கியங்களைத் |
12.9.12
தமிழிலக்கிய மின்தொகுப்புத் திட்டம்
11.9.12
ஆனாய நாயனார்:
|
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள லால்குடிக்கு
அருகே இருக்கும் திருமங்கலம் என்னும் ஊரில் பிறந்தார். இவர் இடையர் குலத்தில் உதித்தவர். சிவபெருமானையே எப்பொழுதும் நினைந்து உருகுவார். அவருக்குப் பல தொண்டுகள் செய்த வண்ணம் இருந்தார். நிரைகளை மேய்ப்பதைத் தன்னுடையத் தொழிலாகக் கொண்டிருந்தார். இவர் இசையின் மீது ஆர்வங்கொண்டிருந்தார். புல்லாங்குழல் இசைப்பதை மிகவும் விரும்பினார். எப்பொழுதும் சிவனை நினைத்தே இசைத்துக்கொண்டிருப்பார்.
ஒருமுறை இவ்வாறு இசைத்துக்கொண்டிருக்கும் போது இவருடைய
இசையைக் கேட்ட தேவர்கள் தத்தம் தொழில் மறந்து மயக்கமுற்றனர் இவரது இசையைக் கேட்டு. பசுக்களும் தம் தொழிலை மறந்து நின்றன. இது மட்டுமா எருது, சிங்கம், மான், யானை போன்ற எண்ணற்ற
உயிரினங்கள் மெய்மறந்து நின்றன. எல்லாமும்
இவர் பின்னே செல்லத் துவங்கின. இச்செய்தியை
அறிந்து சிவனும் தன் துணையுடன் வந்து இவரைக் கண்டு இசையில் மெய்மறந்து போனார். பின்னர் சிவன் கேட்டுக்கொண்டதற்கு இயைய ஆனாயர் கைலாயம்
சென்றார். அங்கு தேவர்களுக்கும் எம்பெருமானுக்கும்
புல்லாங்குழல் வாசித்து எம்பெருமானின் அடியார்களை மகிழ்வித்தார்.
|
10.9.12
மறைமலையடிகளைப் பின்பற்றிய திரு.வி.க
9.9.12
இணைய இதழ்கள்
![]() |
| திண்ணை இதழ் |
இதழியல் நோக்கில் இணையத்தில் பல்கிப்
பெருகி இருப்பவை இணைய இதழ்கள். அச்சு ஊடகங்களை
‘இணைய இதழ்கள்’ என்ற பட்டியலில் சேர்ப்பது ஏற்புடையதாக இருக்காது.
சிற்றிதழ்கள், இதழ்கள் என இணையம் முழுவதும் தமிழ்
மற்றும் பொதுவான செய்திகளைத் தாங்கிய வண்ணம் இவை இணையத்தில் வடிவங்கொண்டுள்ளன. சில அச்சு ஊடகங்களும் (செய்தித்தாள்) இணையத்தில்
தங்களுடைய செய்தித்தாளில் இடம்பெறக் கூடிய செய்திகளை ஏற்றிக் காண்பிக்கின்றன. இருப்பினும் இணைய இதழ்களின் பட்டியலில்
8.9.12
திரு.வி.க. சில குறிப்புகள்
![]() |
திரு.வி.கலியாணசுந்தரனார் |
1883 ஆம் ஆண்டு ஆகஸ்டு 26 அன்று
பிறந்தார். விருத்தாசலம் முதலியாருக்கும் சின்னம்மாளுக்கும் ஆறாவது குழந்தையாகத் தோன்றினார். 1891 ஆம் ஆண்டு சென்னை இராயப்பேட்டையில் தொடக்கக்
கல்வி கற்றார். 1894 ஆம் ஆண்டு வெஸ்லி பள்ளியில்
சேர்ந்து கல்வி கற்றார். சேர்ந்த சில மாதங்களில்
கை கால் முடக்கம் ஏற்பட்டது. இதனால் கல்வி
தடைப்பட்டது. நான்கு ஆண்டுகள் பள்ளிக்குச்
Subscribe to:
Posts (Atom)




