தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

23.10.12

செம்மொழி வரிகள்

ஏ.ஆர்.இரகுமான்

செம்மொழி மாநாட்டையொட்டு உருப்பெற்ற செம்மொழிப்பாடல் அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.  காரணம் ஏ.ஆர்.இரகுமானின் இசையில் கலைஞர் அவர்களின் வரிகள் நம்மை மெய்மறக்கச் செய்தன.  சிலர் அவ்வரிகள் எழுத்துருவில் கிடைக்கப் பெற்றால் பாடல் இசைக்கும் போது நாமும் சேர்ந்து பாடலாமல்லவா என்று கூட அப்பொழுது ஏங்கச் செய்தனர்.  தமிழார்வலர்களுக்காக அவ்வரிகளைப் பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

கலைஞர் மு.கருணாநிதி


பிறப்பொக்கும் எல்ல உயிர்க்கும்
பிறந்த பின்னர் யாதும் ஊரே யாவரும் கேளிர்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன்மொழியே நம் பொன்மொழியாம்!
போஐப் புறம் தள்ளிப்
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழிகாட்டும்
அன்புமொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பைப் பகுத்துக் கூறும்
ஒல்காப்புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடும்
ஒலிக்கின்ற மேகலைஉடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
அதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி
ஓதி வளரும் உயிரான உலகமொழி

கம்ப நாட்டாழ்வாரும்
கவியரசி அவ்வை நல்லாளும்
எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் - தரும்
புத்தாடை அனைத்துக்கும்
வித்தாக விளங்கும் மொழி!

நம்மொழி-நம்மொழி-அதுவே
செம்மொழி-செம்மொழி-நம் தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!
                                                             
                                                                                         - கலைஞர் மு.கருணாநிதி

No comments:

Post a Comment