தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

29.1.15

குறுந்தொகை கூறும் அரை நாள் வாழ்க்கை

வெகுநாட்களாகக் குறுந்தொகையின் பால் எமக்கு ஈர்ப்புண்டு.  அவ்வீர்ப்பினை `இக்குறுந்தொகைப் பாடலினூடே தீர்த்துக்கொள்கிறேன்.


கேளிர் வாழியோ நாளும் என்
நெஞ்சுபிணிக்கொண்ட அம்சில் ஓதிப்
பெருந்தோட் குறுமகள் சிறுமெல் ஆகம்
ஒரு நாள் புணரப் புணரின்
அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே!_----- நக்கீரர்

பாடல் பொருள்;
அவள் அழகிய கூந்தல் உடையவள் பெருத்த தோள் கொண்அவள்.  இளையவள். சிறியதான மெல்லிய மேனி கொண்டவள்.  அது எப்போதுமே என் நெஞ்சைக் கட்டி வைத்துள்ளது,  அவளை ஒருநாள் தழுவிக்கொள்ள வேண்டும்.  அப்படிச் செய்துவிட்டால், அரைநாள் கூட நான் வாழவிரும்பமாடேன்
இப்பாடல் தலைவனனின் தகைமைக் குறைவதைக் கண்ட தோழன் அவனுக்கு உணர்த்துவ தாய் உள்ளது.  தலைவன் தலைவியைச் சந்தித்து தன் பெருந்தகைமைகளை இழந்து வருகிறான் என்பதை உணர்த்துவதாய் உள்ளது.

28.1.15

தில்லையாடி வள்ளியம்மை - வரலாற்றுப் பெண்மணி

.
சிறந்த இந்திய பெண்களுள் ஒருவராக போற்றத்தக்க தில்லையாடி வள்ளியம்மை குறித்த பதிவு.........