தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

11.9.13

சுதேசமித்திரன் இதழில் பாரதிதாசனின் கட்டுரை

பாரதிதாசன் வேண்டிய நிகண்டு
பாவேந்தர் புதுச்சேரியைச் சார்ந்த முத்திரைப் பாளையம் அரசினர் பள்ளியில் பணியாற்றி வந்தார்.  அப்போது ‘தமிழ்பாஷைக்கு ஒரு புதிய நிகண்டு வேண்டும்’ என்ற கட்டுரையை எழுதி சுதேசமித்திரன் இதழில் பிறமொழிச் சொற்களைச் சேர்ப்பதால் மொழி வளம்பெறுமென்றும், தமிழ்மொழிக்குப் புதிய நிகண்டு வேண்டும்  என்ற கட்டுரையை எழுதிஅவ்விதழில் 26-05-1914 ஆம் நாளில் வெளியிட்டார்.  தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்களைச் சேர்ப்பதால் மொழி வளம் பெறுமென்றும், தமிழ்மொழிக்குப் புதிய நிகண்டு வேண்டும் என்றும் இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.  கட்டுரையின் ஒரு பகுதி இதோ.
“நமக்கு அடுத்த வட பக்கத்தில் உள்ள தெலுங்கர்களோ, தங்கள் பாஷையைச் சீர்திருத்துமாறு போட்டி போட்டியாய்ச் சாலைகளும் சங்கங்களும் ஏற்படுத்திப் பரபரப்புடன் வேலை செய்து வருகிறார்கள்.  அவர்களின் ஊக்கத்தைப் பார்த்தாவது தமிழர்கள் தங்கள் பாஷையின் விஷயத்தில் ஏதாவது கவலை கொள்கிறார்களோ என்றால் அது மாத்திரமில்லை”.