தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

20.8.18

திரு.விக. வின் இறுதி ஊர்வலத்தில் பெரியார்

திரு.வி.க இறந்த செய்தி சென்னை நகர் முழுதும் பரவியது.  அன்பர் கூட்டம் கடல் எனத் திரண்டது.  சைவர் வந்தனர்; கிறிஸ்தவ ர் வந்தனர்; ஜைனர் வந்தனர்; பௌத்தர் வந்தனர். அரசியல் கட்சித் தலைவர் பலரும் வந்தனர்.

     அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

1953 செப் 18 காலை திரு.வி.க வின் உடல் பெரம்பூருக்கு எடுத்துச்செல்லப்பட்டது.  சென்னைத் தொழிலாளர் சங்கத்திலே வைக்கப்பட்டது.
     25 ஆண்டுகளுக்கு மேலாகத் தம் இன்பத்திலும் துன்பத்திலும் உற்ற துணையாய் இருந்த ஒப்பற்ற தலைவருக்குத் தொழிலாளர் வணக்கம் செலுத்தினர்.

     திரு.வி.க மறைந்த செய்தி அறிந்த பெரியார் ஈரோட்டிலிருந்து புறப்பட்டுச் சென்னை வந்தார்.  மவுண்ட் ரோட்டில் ஊர்வலத்தில் கலந்தார்.  ஊர்வலம் இராயப்பேட்டையை சேர்ந்தது.  அப்போது பெருமழை பெய்தது.  இரவு 7 மணிக்கு மயிலை மயானத்தில் அவரின் உடலுக்குத் தீ மூட்டப்பட்டது.

திரு.வி.க மறைந்தார்; மங்காத புகழ் பெற்றார்.

No comments:

Post a Comment