தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

19.8.18

திரு.வி.க-வின் இறுதி

     1949 ஆம் ஆண்டு அவரது இடது கண்ணிலே படலம் தோன்றியது.  அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை.
 
   திரு.வி. வின் நெருங்கிய நண்பர் கந்தசாமிப்பிள்ளை கண் மருத்துவர்.  அறுவைச் சிகிச்சைச் செய்தார்.  என்ன ஆயிற்று? பார்வை வரவேயில்லை; போயிற்று.

     திரு.வி.க. வெளியே செல்வது விடுத்தார்.  அடுத்த ஆண்டு மற்றொரு கண்ணும் இழந்தார்.  படுக்கையில் கிடக்கலானார். 

     1953 ஆம் ஆண்டு செப் 17 ஆம் தேதி திரு.வி.க கண் இழந்து படுக்கையில் கிடக்கிறார் என்ற செய்தி கேட்டு அவரைப் பார்க்க வந்தார் ஒரு அம்மையார்.

     அப்பெண்மணி நன்கு பாடுதல் வல்லார்.  தேவாரப் பதிகங்களைப் பாடினார்.  திருவருட் பாக்களைப் பாடினார்.  பகல் முதல் மாலை வரை பாடுவார்.

     அப்பாடல்களிலே திரு.வி.க மூழ்கித் திளைத்திருந்தார்.  இரவு 7.30 மணிக்கு மரண வேதனையுற்றார்.  இளமை முதல் அவரின் இணைபிரியா நண்பராக விளங்கிய சச்சிதானந்தம் பிள்ளை அவர்கள் உடன் இருந்தார்கள்.  திரு.வி.க வின் காதில் ஐந்தெழுத்து மந்திரம் ஓதினார்கள்.  அவ்வளவில் திரு.வி.க வின் ஆவி பிரிந்தது.

      இரவு 7.30 மணி இறைவனடி சேர்ந்தார் திரு.வி.க.

No comments:

Post a Comment