தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

23.11.12

கடலூர் அஞ்சலையம்மாள்




***கடலூர் அஞ்சலையம்மாள்*** கருத்து எழுத sadishirisappan@yandex.com

நம் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டவர்களின் வரலாறுகளை அவ்வப்பொழுது தொகுத்து வெளியிட்டு வருகிறேன்.    என்னால் அவர்களுக்குக் கொடுக்கக்கூடிய மரியாதையே  இச்சிறு பணி!  அவ்வகையில் கடலூர் அஞ்சலையம்மாளைப் பற்றி நான் கேள்விப்பட்ட படித்தறிந்த செய்திகளை இக்கட்டுரையில் பதிவிடுகிறேன்.

1890ஆம் ஆண்டு கடலூரில் உள்ள முதுநகர் என்னுமிடத்தில் பிறந்தவர்.  மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்தார்.  இவர்தம் வாழ்க்கையை சுயநலமின்றி அமைத்துக்கொண்டவர்.  காந்திய வழியைப் பின்பற்றத் தொடங்கியவர்.  1921ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய தருணத்தில் தம்முடைய பொது வாழ்க்கையைத் தொடங்கினார் அஞ்சலையம்மாள்.


நீலன் சிலையை அகற்றும் போராட்டம், உப்புக்காய்ச்சும் போராட்டம், மறியல் போராட்டம், தனியாள் அறப்போராட்டம்,  வெள்ளையனே வெளியேறு போராட்டம் ஆகிய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு வெள்ளையர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.


மிகச்சிறந்த பேச்சாளராக விளங்கிய இவரின் பேச்சைக் கேட்பதற்காகவே பல்லோர் திரள்வர்.  வெள்ளையனே வெளியேறு இயக்கம் நாடுமுழுவதும் நடைபெற்றபோது அதற்கு வலுச்சேர்க்கும் முகத்தான் பல மேடைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

கருவுற்ற நிலையிலும் பல போராட்டங்களில் கலந்துகொண்டவர்.  சிறாஇக்குச் சென்றாவர்.  பிரசவத்தின்போது குழந்தையைப் பெற்றெடுக்க மருத்துவமனைக்குச் சென்று பின்னர் மீண்டும் சிறையிலேயே அடைக்கப்பட்டார்.

தன்னுடைய சொத்துக்கள் பலவற்றையும் விற்று போராட்டத்திற்காகச் செலவு செய்தார்.   நீலன் சிலையை அகற்றும் போராட்டம் நடைபெற்றபோது தனது 9 வயது மகளை ஈடுபடுத்தினார்.  இவருடைய மகள் லீலாவதி என்னும் பெயரைக் கொண்டவராவார்.

தமிழ்நாடு அரசு  கடலூர் அஞ்சலையம்மாளைப் பற்றிய பாடப்பகுதியை மாணவர்கள் பாடநூலில் அமைத்து, பல்வேறு செய்திகளை அறியச் செய்துள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று.

தென்னாற்காடு மாவட்டத்தின் தெய்வத்தாய் என்றும் வேலுநாச்சியார் என்றும் போற்றப்பட்டார்.  இவரின் கணவர் முருகப்படையாச்சியாவார்.  மகன்கள்: காந்தி மற்றும் ஜெயவீரன் . மகள் அம்மாக்கண்ணு (லீலாவதி)

அஞ்சலையம்மாள் அவர்கள் பின்னாளில் தமிழக சட்டமன்றத்தில் அங்கம் வகித்தார்கள்.

புகைப்படத்திற்காக நன்றி:காமத்.காம்

No comments:

Post a Comment