தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

13.2.13

பத்தும் நூறும்

தொண்ணூறு, தொள்ளாயிரம் 
ஒன்பது என்ற எண்ணின் முன் பத்து, நூறு எவ்வாறு புணரும்?

ஒன்பது  என்ற எண்ணுடன் ‘பத்து’ ,`நூறு’ என்ற இரு எண்களும் வந்து புணரும்போது பத்தினை நூறாகவும், நூற்றை ஆயிரமாகவும் திரித்து, நிலைமொழியில் முதலிலுள்ள ‘ஒ’ என்னும் உயிர் எழுத்துடன் ‘த்’ என்னும் மெய்யைக் கூட்டி, நிறுத்தி, நிலைமொழியில் உள்ள பத்தை நீக்கி, அந்த நிலைமொழியில் முதல் எழுத்துக்குப்பக்கத்து எழுத்தினை முறையே ‘ண்’ என்ற மெய்யாகவும், ‘ள்’ என்ற மெய்யாகவும் மாற்றுவது முறையாகும்.

(உ-ம்)
ஒன்பது+பத்து=தொண்ணூறு
ஒம்பஃது+பத்து=தொண்ணூறு

ஒன்பது+நூறு=தொள்ளாயிரம்
ஒன்பஃது+நூறு=தொள்ளாயிரம்


``ஒன்பா னொடுபத்தும் நூறும் ஒன்றின்
முன்னதின் ஏனைய முரணி, ஒவ்வொடு
தகரம் நிறீஇப் பஃது அகற்றி, ணவ்வை
நிரலே ண, ளவாகத் திரிப்பது நெறியே”. ( நன்னூல் 194)

No comments:

Post a Comment