தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

26.2.13

பிழை நேரும் இடங்கள் அறிவோம்

பிழை தவிர்ப்போம்


 தமிழ் மொழியைப் பிழையின்றி எழுத ஏற்ற பயிற்சியைப் பெற்றிருப்பது இன்றியமையாதது.  ஒரு எழுத்து வர வேண்டிய இடத்தில் மற்றொரு எழுத்து வரப்பெற்றால் அங்கு பொருட்பிழை நேர்வதைக் காண்கிறோம்.  இதைத் தவிர்ப்பதற்கான சிறிய பதிவே இது.

சலி- சலிப்பு                                                                                                                                    
சளி- சளிபிடித்தல்

சூள்-சூளுரைத்த்ல்
சூல்-சூல் கொண்ட மலர்

சுன்னம் - பூஜ்ஜியம்/சுழியம்
சுண்ணம்- சுண்ணாம்பு

சீறடி- சிறிய அடி
சீரடி - புகழ் பெற்ற அடி

துரத்தல் - விரட்டுதல்
துறத்தல் - விடுத்தல்

தினை - உணவுப் பொருள்
திணை - அன்பின் ஐந்திணை/ ஒழுக்கம்

தாலி - கழுத்தில் அணிவது
தாளி - தாளித்தல்

தவலை - பாத்திரம்
தவளை - உயிரினம்

வண்மை- நா வண்மை
வன்மை - கல் வன்மையானது

பாளை - தென்னம் பாளை
பாலை - அன்பின் ஐந்திணைகளில் ஒன்று


கடப்பாரை - குழி தோண்டப் பயன்படுவது
பாறை - மலைப் பகுதி

பரவை - கடல்
பறவை - பறப்பன

நறை - வாசனை
நரை - வெள்ளை முடி

சொறி - காயம்
சொரி - பூச்சொரிதல்

சேணை - கிழங்கு
சேனை - படை

தேநீர் - டீ
தேனீர் -தேனியின் தண்ணீர்

துரவு - ஆழ்கிணறு
துறவு - துறத்தல்

குறவர் - குறிசொல்பவர்
குரவர் - சமயக் குரவர்

திண்- திண் தோள் வலிமை
தின் - உண்பது

பரி - பரிசல்,  குதிரை
பறி- பறித்தல்

1 comment: