தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

11.3.13

பாவேந்தர் கலந்து கொண்ட சுயமரியாதை மாநாடுகள்

பாவேந்தரும் சுயமரியாதை மாநாடும்

1928 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பெரியார் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுவதாக இருந்தது. அப்பொழுதுதான் முதன் முதலாக பாவேந்தர் பெரியார் கூட்டத்தில் கலந்துகொண்டு அவரின் பேச்சைக் கேட்கத் தொடங்கினார். அன்று முதல் பெரியாரின் கொள்கைகளை ஏற்றுச் செயல்படத் தொடங்கினார்.பகுத்தறிவுக் கொள்கைகள் குறித்து எழுதலானார். 1929 முதல் தொடர்ந்து கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றை குடியரசு, பகுத்தறிவு போன்ற இதழ்களில் எழுதி வந்தார்.

பாவேந்தர் 
பாவேந்தர் 1930-31 ஆண்டுகளில் பல சுயமரியாதை மாநாடுகளில் கலந்து கொண்டு மாநாட்டுக்கு வலுச்சேர்த்துள்ளார்.அம்மாநாடுகளில் கலந்துகொண்டு மாநாடு பற்றிய செய்திகளைத் தன்னுடைய இதழில் வெளியிட்டிருக்கிறார்.குறிப்பாக மாநாட்டுத் தீர்மானங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
  1. ஈரோடு இரண்டாவது சுயமரியாதை இயக்க மாநாடு
  2. மூன்றாவது விருதுநகர் சுயமரியாதை மாநாடு
  3. சென்னை மாகாணச் சுயமரியாதைத் தொண்டர் இரண்டாவது மாநாடு,
  4. திருநெல்வேலி ஜில்லா (((தூத்துக்குடி) 4-வது சுயமரியாதை மாநாடு
  5. விருதுநகர் இளைஞர் மாநாடு
  6. நாகை சுயமரியாதை மாநாடு
  7. செட்டிமார் நாட்டு முதலாவது சுயமரியாதை மாநாடு
மேற்கண்ட மாநாடுகளில் கொண்டுவரப்பட்டத் தீர்மானங்களைத் தன்னுடைய புதுவை ’முரசு’ இதழில் வெளியிட்டார். இவை கவிதை வடிவிலும் இடம்பெற்றிருந்தன என்பது தான் குறிப்பிட வேண்டிய செய்தி.
புகைப்படத்திற்காக நன்றி: தமிழ்க் களஞ்சியம்.காம்

No comments:

Post a Comment