தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

23.3.13

பெரியாருக்குப் பாவேந்தரின் வாழ்த்து மடல்

வாழ்த்து மடல்

பாவேந்தர்
பாவேந்தர் அவர்கள் பெரியாருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர்.  அவ்வாறு நெருங்கிப் பழகும் வாய்ப்பு 1928 ஆம் ஆண்டு தோற்றம் பெற்றது.  அவ்வாண்டில் தான் பெரியார் பாவேந்தர் சந்திப்பு நிகழ்ந்தது.  1928 ஆம் ஆண்டில் புதுச்சேரியில் பெரியார் பேசிய பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.  அப்பொதுக்கூட்டத்தில் பாவேந்தர் கலந்து கொண்டார்.  பெரியார்தம் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டார்.  பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையை சுயமரியாதைக் கொள்கையை முழங்கும் பீரங்கியாகத் தோற்றம் பெற்றார்.

தொடர்ந்து பெரியாரின் கொள்கைகள் குறித்துத் தன் இதழில் எழுதலானார்.
பெரியார் அவர்கள் 10-2-1929 அன்று புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார்.  பாவேந்தர், பெரியாருக்கு வரவேற்பு வாழ்த்துமடல் வழங்கினார்.  அவ்வாழ்த்து மடல் வரிகள்........

வருக உயர் இராமசாமிப் பெயர்கொள்
  அறிஞ, உன்றன் வரவால் இன்பம்
பருக வரும் இந்நாளை வாழ்த்துகின்றோம்
  பனிபறக்கத் தகத்த காயம்
பெருக வரும் செங்கதிர் போல் மடமை வழக்
  கம்பறக்கப் பீடை இங்கு
மருவ வைத்த பார்ப்பனியம் வடு வின்றிப்
  பறக்க உனை வரவேற்போமால்
சுயமரியா தைப் பெயர்கொள் பயிர்செழிக்கத்
  தொண்டு செய்யும் இராமசாமித்தலைவா
புயத்தெதிரே புவிபெயர்ந்து வரும்போது
  புலன் அஞ்சாத் தன்மையுள்ள கர்மவீரா
செயற்கரிய செயப்பிறந்த பெரியோய் இந்தச்
  செகத்துநிலை நன்கறிந்த அறிவுமிக்கோய்
வியப்புறு நின் இயக்கமது நன்றே வெல்க
  மேன்மை யெல்லாம் நீ எய்தி வாழ்க நன்றே!

புகைப்பட நன்றி: புதுத்திண்ணை

No comments:

Post a Comment