தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

9.3.14

பொருள் இலக்கணத்திற்காக எழுந்த நூல்கள்

பொருள் சொல்லிய நூல்கள்
     தமிழ் இலக்கண நூல்கள் பற்றியும் அவற்றின் வரலாறு பற்றியுமே தனி நூல் படைக்கலாம்.  எப்படியாயினும் தொல்காப்பியமே முதனூல் என்னும் பெருமையைப் பெறுகிறது.  எழுத்து, சொல் பற்றிய இலக்கணம் பொதுவான ஒன்றாகக் கருதப்படுகிறது.  பொருளிலக்கணமோ சிறப்பான ஒன்றாகப் போற்றப்படுகிறது.  இத்தகையச் சிறப்புமிக்கப் பொருளிலக்கணஞ்சுட்ட எழுந்த பொருள் நூல்களை இப்பதிவில் பட்டியலிடுகிறேன்.
 
1. இறையனார் களவியல் - இறையனார் - கி.பி.8 ஆம் நூற்றாண்டு - அகப்பொருள் பற்றி கூறுகிறது.
2. பன்னிருபடலம் - கி.பி. 8 ஆம் நூற்றாண்டு - புறப்பொருள் பற்றி கூறுகிறது ( நூல் கிடைக்கவில்லை)
3. புறப்பொருள் வெண்பா மாலை - ஐயனாரிதனார்- கி.பி.10 ஆம் நூற்றாண்டு- புறப்பொருள் பன்னிருபடலம் இதன் முதனூல் என்பர்- புறப்பொருள் பற்றி கூறுகிறது.
4. நம்பியகப்பொருள் - நாற்கவிராச நம்பி - கி.பி.12 ஆம் நூற்றாண்டு - அகப்பொருள் பற்றி கூறுகிறது.
5. தமிழ் நெறிவிளக்கம் - கி.பி.12 ஆம் நூற்றாண்டு - அகப்பொருள் பற்றியது.
6. களவியற் காரிகை - அகப்பொருள் முழுமையாகக் கிடைக்கவில்லை
7. மாறனகப்பொருள் - திருக்குருகைப் பெருமாள் கவிராயர் - கி.பி. 17 - அகப்பொருள்
 

No comments:

Post a Comment