தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

20.1.13

தமிழ் மென்பொருள் வளர்ச்சிக்கு வித்திட்ட அறிஞர்

ந. தெய்வ சுந்தரம் 
அறிவோம் திரு. ந. தெய்வ சுந்தரம் அவர்களை:

தமிழ்மொழி ஆய்வில் ஈடுபட்டு வருபவர் திரு.ந.தெய்வ சுந்தரம் ஆவார்.  சென்னைப் பலகலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் ஆய்வாளராகவும் இருந்து ஓய்வு பெற்றவர்.  தமிழ் மொழி குறித்த ஆய்வின் விளைவாகவும் மொழியியல் திறத்தினாலும் பல தமிழ் மென்பொருள்கள் உருப்பெற ஏதுவாக இருந்தவர்.  பல் திறத்த மென்பொருள் கட்டுநர்களையும் மொழியியல் வல்லுநர்களையும் ஒருங்கு கூட்டி தமிழ் மென்பொருள் உருவாகச் சிறப்பாகப் பணியாற்றியவர்.

கணினி மொழியியல் ஆய்வு, தமிழ் மென்பொருள் உருவாக்கம் முதலியவற்றில் தன்னுடைய ஈடுபாட்டை மேலிடச் செய்து தமிழ் இணைய வளர்ச்சிக்கு வித்திட்டு வருகிறார்.

அண்மையில் வெளிவந்த மெந்தமிழ்ச் சொல்லாளர் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு இவரின் முயற்சியில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

இவரின் `தமிழ் வளர்ச்சியில் கணினித் தமிழ்’ குறித்த கட்டுரையை இங்குக் காணலாம்.

No comments:

Post a Comment