தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

26.1.13

அறிவோம் முனைவர் க.துரையரசன் அவர்களை

முனைவர் க.துரையரசன், பேராசிரியர் 


கும்பகோணம் கல்லூரியில் உரையாற்றும் போது
கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
 
1991 ஆம் ஆண்டு கல்வியியலில் பட்டம் பெற்றார்.  பட்டம் பெற்ற பின்னர் ஆக்ஸ்போர்டு மேனிலைப் பள்ளியிலும் அதனைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் மேனிலைப் பள்ளியிலும் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 
 
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாகப் போட்டித் தேர்வு நடத்திக் கல்லூரி ஆசிரியர்களைப் பணியமர்த்துகின்ற புதிய முறையைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது.  முதல் முறையாக நடைபெற்ற இத்தேர்வில் திரு.துரையரசன் அவர்கள் வெற்றி பெற்று 1996 முதல் அரசு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பண்யாற்றி வருகிறார்.
 
கணினி பற்றிய ஓரளவு புரிதலுடன் பணியாற்றி வந்த இவர் 2004 ஆம் ஆண்டு தமிழ் இணையப் பலகலைக்கழகத்தின் உதவி இயக்குநராகப் பணியாற்றும் அரிய வாய்ப்பினைப் பெற்றார்.  இங்குதான் கணினியில் ஆளுமைத் திறமும் இணையப் பயன்பாட்டுத் திறமும் பெற்றார்.
 
தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பணியைப் பரவலாக்கப் பரிந்துரைத்தவர்.  இவருடைய ஆலோசனையை ஏற்று வா.செ.குழந்தைசாமி அவர்களிடத்தில் ஒப்புதல் பெறப்பட்டு தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் தமிழ் த.இ.ப.க பணிகளைப் பரவலாக்கும் அரங்குகள் நடத்தப்பட்டன.
 
2002-06 இல் மட்டுமே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் த.இ.ப.வின் பணிப்பரவலாகும் அரங்குகள் நடத்தப்பட்டன.  இங்ஙனம் நடத்தப்பெற்ற அரங்குகளில் எல்லாம் திரு.துரையரசன் அவர்கள் கலந்துகொண்டு செயல் விளக்கம் வழங்கியிருக்கிறார். 
 
இங்ஙனம் நடத்தப்பெற்ற அரங்குகளில் எல்லாம் இவர் கலந்துகொண்டு பயிற்சி அளித்த போது பெரும்பாலான மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் த.இ.ப பணிகள் பற்றிப் பெரிதும் தெரியவில்லை என்பதை அறிந்துள்ளார். 
 
இவை இவரின் மனதைப் பெரிதும் பாதித்தன.  உலகு தழுவி வாழும் தமிழர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழ் கற்பிக்கும் நோக்கத்திற்காகத் த.இ.ப. தொடங்கப்பெற்றது என்றாலும் அதன் பணிகள் தாய்த்தமிழ் நாட்டார்க்குத் தெரியாமல் இருக்கிறதே என்று கவலையுற்றிருக்கிறார்.
 
இக்கவலையுடன் பணியாற்றிய இவர் 2006 ஆம் ஆண்டில் `இணையமும் தமிழும்’ என்னும் தலைப்பில் பாடம் நடத்தும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். இதன் மூலம் மாணவர்களிடம் இணையம் குறித்த செய்திகளையும் தமிழ் இணையம் குறித்த செய்திகளையும் கற்பிக்கத் தொடங்கியிருக்கிறார்.
 
இவ்வாறு கற்பித்ததன் விளைவாகத் தனக்குத் தெரிந்த அத்தனை விடயங்களையும் ஒன்றிணைக்க விரும்பி ‘இணையமும் இனிய தமிழும் ’என்னும் நூலை ஆக்கினார்.  இந்நூலைப் பற்றிய விமர்சனம் அடுத்த பதிவில் இடம்பெறுகிறது.

2 comments:

  1. நல்ல ஆளுமையுள்ள மனிதர். வாழ்த்துக்கள் பேராசிரியருக்கு.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் அய்யா.

    ReplyDelete