தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

15.5.13

திரு.வி.க தேசபக்தனிலிருந்து ஏன் விலகினார்?

வ.வே.சு ஐயர் ஆசிரியரானார்
சுமார் இரண்டாண்டுகளுக்கு மேலாக மிகத் திறம்பட நடத்தி வந்த ‘தேசபக்தனை’ விட்டு வெளியேறும் நிலை திரு.வி.க.விற்கு ஏற்பட்டது.  தேசபக்தனில் காணப்படும் திரு.வி.கவின் எழுத்துக்களில் கொதிப்பு அதிகம் என்றும், அதை குறைத்துக் கொள்ளாவிடில் அரசு நடவடிக்கை எடுக்க நேரும் என்றும் லார்டு வில்லிஸ்டன் திரு.வி.கவை அழைத்துக் கூறினார்.
 
மேலும் அப்போது சில விளம்பரங்களை வெளியிடுதல் கூடாது என்று காங்கிரஸ் கட்டளை பிறப்பித்திருந்தது.  சென்னைப் பத்திரிகைகளில் பல அக்கட்டளைகளை மீறி நடந்தன.  ‘தேசபக்தனும்’ அக்கட்டளைகளை மீற வேண்டும் என பலர் திரு.வி.க வை வற்புறுத்தினர்.  ஆனால் திரு.வி.க அதற்கு இணங்கவில்லை.  அதனால் இவரின் பத்திரிக்கைக்குச் சிறிது நட்டம் ஏற்பட்டாலும் செல்வாக்கு அதிகரித்தது.  ‘தேசபக்தன்’ மக்களிடம் நல்ல செல்வாக்கு பெற்றிருந்த நிலையில் திரு.வி.கவிற்கு ஒரு தகவல் எட்டியது.  பிரிட்டிஷ் இந்தியா அச்சுக்கூடம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற தகவலே அது.
 
திரு.வி.க விடம் அதன் பதிவுப் பொறுப்பு இருந்தும், இவரைக் கேட்காமல் அச்சுக் கூடம் ஒத்திவைக்கப்பட்ட செயலை இவரால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.  ஆகவேதான் அதிலிருந்து விலகும் எண்ணத்தை ஒரு தலையங்கத்தில் வெளியிட்டார்.  அதைக் கண்டு காமத் கண் கலங்கினார்.  சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் உள்ளிட்ட பலர் சமாதானம் செய்து பார்த்தும் திரு.வி.க அவர்கள் தன் நிலையை மாற்றிக்கொள்ளவில்லை.  பின் வ.வே.சு ஐயர் அவரவழைக்கப்பட்டார்.
 
அவர் ‘தேசபக்தன்’ ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.  வ.வே.சு. ஐயர் ஆசிரியர் பொறுப்பேற்றுக் கொண்டதும் அவரால் ‘தேசபக்தனில் புதிய ‘பத்திரிகாசிரியன்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட கட்டுரை அவர் திரு.வி.கவிடம் எவ்வளவு அன்பும் மரியாதையும் வைத்திருந்தார் என்பது புலனாகும்.

No comments:

Post a Comment