தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

5.5.13

சிறப்புலி நாயனார்

அறிவோம் நாயன்மார்களை
சிறப்புலி நாயனார்
காவிரி ஆறு பாய்ந்து வளங்கொழிக்கும் சோழ நாட்டில் திரு ஆக்கூர் என்னும் ஊரில் வேதியர் குலத்தில் அவதரித்தவர் , சிறப்புலி நாயனார்.  அவர் பரமேஸ்வரனாகிய சிவபெருமானிடத்துப் பேரன்பு கொண்டிருந்தவர்.  தம்மை நாடி வந்த சிவனடியார்களுக்கு வேண்டியதை வழங்கி வள்ளலுக்கு வள்ளலாய் விளங்கினார்.  சிவனடியார்களின் திருவடிகளில் வணங்கி அவர்கலுக்கு உணவும் படைத்து வந்தார்.  உள்ள பொருளெல்லாம் சிவன் தந்தது, என்று எண்ணிக் கேளா முன்னரே அடியவர்கட்கு வழங்கியவர், சேக்கிழார் இவரை வள்ளலார் என்றே அழைக்கிறார்.  சிவபக்தியின் முதற்படி ஈவிரக்கமே, என்பதை நன்குணர்ந்தவர்.
 
நாள்தோறும் ஐந்தெழுத்து மந்திரத்தினை ஓதிச் சிவ வேள்விகளையெல்லாம் செய்து சிவபெருமானை உள்ளம் உருக வழிபட்டார்.  இவ்வாறு பல சிவ புண்ணியங்களைச் செய்து, புகழும் சிறப்பும் பெற்றதால், அவர் சிவபெருமானின் அருளைப் பெற்று அவருடன் ஐக்கியமானார்.  இவர்,
 
ஆளும் அங்கிணருக் கன்பர்
     அணைந்தபோ தடியில் தாழ்ந்து
மூளுமா தரவு பொங்க
     முன்பு நின்றினிய கூறி
நாளும்நல் லமுதம் ஊட்டி
     நயந்தன எல்லாம் நல்கி
நீளுமின் பத்துள் தங்கி
    நிதிமழை மாரி போன்றார்!
 
நிமலனாருடைய திருத்தொண்டுகள் பல புரிந்து, வள்ளன்மையே அடியவர்களுடைய உயர்ந்த பண்பு என்பதற்கேற்ப வாழ்நாளைக் கழித்து, வாரி வழங்கும் வள்ளலாக இறை வாசக் கமலம் இதயத்தில் இருத்தலே இணையற்றதாக, கருதி வாழ்ந்து சென்றவர், என்றால் மிகையாகாது.

புகைப்பட நன்றி:
சிவாடெம்பில்ஸ்.காம்

No comments:

Post a Comment