தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

12.7.13

அறிவோம் நாயன்மாரை: மூர்த்தி நாயனார்

அறிவோம் நாயன்மார்களை
 புகைப்படத்திற்கு நன்றி: சிவம் தளம்

மூர்த்தி நாயனார்
புகழ்பெற்று விளங்கும் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரை மாநகரில் வணிகர் குலத்தில் அவதரித்தவர், மூர்த்தி நாயனார்.  அவர் எப்பொழுதும் சிவபெருமானது திருவடியையே சிந்தித்துக் கொண்டிருப்பார்.   நாள்தோறும் மதுரை சோம சுந்தரப் பெருமானுக்குச் சந்தனக் காப்பு வழங்குவதையே பெருந்தொண்டாகக் கருதி வந்தார்.
அந்நாளில் வடுக சாதியைச் சேர்ந்த கன்னட தேசத்து அரசன் ஒருவன் மதுரை மீது போர் தொடுத்து வெற்றி கொண்டான்.  அவன் சமண சமயத்தை ஆதரித்து வந்ததால் சைவர்களும் சிவனடியார்களும் துன்புற்றனர்.  மேலும் அவன் மூர்த்தி நாயனாருக்குச் சந்தனக் கட்டை கிடைக்காமல் இருக்கத் தடை செய்தான்.
இந்நிலையில் ஒரு நாள் சந்தனக் கட்டையை எங்கு தேடியும் கிடைக்காமல் போனதால் வருத்தமுற்ற மூர்த்தியார் இறைவனது திருக்கோயிலை வந்தடைந்தார்.  ஏதேதோ சிந்தித்து இறுதியில் தனது முழங்கையைச் சந்தனக் கல்லில் தேய்த்தார் அதனால் நரம்பும் எலும்பும் தேய்ந்தன.  இரத்தம் பெருகியது.  அதைக் கண்ட சோமசுந்தரக் கடவுள் அசரீரி மூலம் பின்வருமாறு ஆறுதல் கூறினார்.
``அன்பனே! என் மீது கொண்ட பக்தியினால் சந்தனக்கட்டை கிடைக்கவில்லையே என்று ஏங்கி, உன்கையைத் தேய்த்து இரத்தம் பீறிடச் செய்தாய்.  உன் பக்தியை நாம் மெச்சினோம்.  சிவனடியார்களுக்குத் துன்பம் செய்யும் அரசன் இன்றிரவே இறந்துவிடுவான்.  அவன் இறந்தபின் நீரே இந்த நாட்டின் சிம்மாசனத்தில் அமரப் போகிறீர்.  உன்னால் இங்கே சைவ சமயமும், சிவனடியார்களும் சிறப்பு அடையப் போகிறார்கள்!”
இந்த அசரீரி வாக்கைச் சோமசுந்தரரே கூறியபடியால், மூர்த்தி நாயனார் மிகவும் மனமகிழ்ந்து சோமசுந்தரக் கடவுளைப் பக்தியுடன் தோத்திரம் செய்தார்.
சோம சுந்தரக் கடவுளின் அருளால் எழுந்த அசரீரி வாக்கின்படியே அன்று இரவே கருநாடக தேசத்து அரசன் இறந்து நரகத்துக்குச் சென்றான்.  மன்னன் இறந்துவிடவே மதுரை மாநகரே இன்புற்றது.

No comments:

Post a Comment