தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

13.7.13

திரு.வி.கவும் மறைமலையடிகளும் வேறுபட்டு நின்ற இடங்கள்

திரு.வி.க - மறைமலையடிகள் கருத்து வேறுபாடுகள்
திரு.வி.க மறைமலையடிகள் பால் ஒரு சிறிது கருத்து வேறுபாடு உடையவராய் இருப்பினும் அதனைப் பெரிதாகக் கருதாமல் சிறந்த தொண்டராகவே அன்புநிலை மாறாமல் இருந்தார்.  ஆயினும் அரசியல் துறையில் அடிகள் போக்கு வேறு திரு.வி.க வின் போக்கு வேறு.

``அடிகள் எழுத்தில் ஆசிரியர்.....
தமிழர் என்ற பிரிவை வளர்க்கும்
கருவிகளிருக்கின்றன, அவை மக்களின்
ஒருமைப்பாட்டையும் வளர்ச்சியையும் குலைக்கும்”
என்பது திரு.வி.கவின் உட்கிடக்கையாக இருந்தது.

மறைமலையடிகள் சமய நூல்களிலும், மெய்யறிவு நூல்களிலும் புகுந்து ஆய்வு செய்து வெளியிடுங் கருத்துகளைத் திரு.வி.க மனம் ஏற்பதில்லை.  ச்மயம், மெய்யறிவு ஆகியவை ஆய்வுக்கு எட்டாதன என்பதும் இவ்வாய்வால் மக்கள் வாழ்க்கை நலம் பெறாது என்பதும், இவை முரட்டுக்கும் மூர்க்கத்துக்கும் இரையாகும் என்பதும் திரு.வி.க வின் எண்ணமாகும்.  திரு.வி.க எம்மதமும் ஒன்றே எனுங் கொள்கையர்.  அடிகளாரோ சைவசமயமே சமயம் எனும் கொள்கையர்.

திரு.வி.க மறைமலையடிகள் ஆகியோரிடை மொழி, சமயம், அரசியல் நிலைகளில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு என்ற அளவில் முன்னேற இருவரும் அயராது பாடுபட்டனர்.  இவ்விருபெரும் அறிஞர்களால் தமிழகத்தில் ஒரு பெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டது என்பதில் யார்க்கும் ஐயமில்லை.  இவ்வறிஞர் வழிநின்று புதியதொரு தமிழுலகைப் படைத்தல் வேண்டும்.

No comments:

Post a Comment