தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

30.12.12

உத்தமம் அமைப்பிற்கு நெஞ்சார்ந்த நன்றி


உத்தமத்திற்கு நன்றி - சிலம்புகள் வலைப்பூ
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) ஒரு இலாப நோக்கமற்ற அரசு சாராத பன்னாட்டு அமைப்பு.  தமிழ்க்கணிமையை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்டது.  இரண்டாயிரமாவது ஆண்டில் தன் சேவையைத் துவக்கியது.  கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இவ்வுத்தமம் நிறுவனம் தற்போது பதினொன்றாம் உலகத்தமிழ் இணைய மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.  இதற்காக இந்நிறுவனத்திற்குப் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறது சிலம்புகள் வலைப்பூ.

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வருகின்ற இக்காலகட்டத்தில் தமிழையும் அதில் ஏற்றி அழகு பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் இருக்கின்றனர்.  இவ்வெண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டுமாயின் உத்தமம் போன்ற நிறுவனங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வரவேற்கத்தக்கது; போற்றுதலுக்குரியது.

உத்தமம் நிறுவனத்தின் தலைவராக திரு.மணி.மணிவண்ணன் அவர்களும் செயல் இயக்குனராக திரு.அ.இளங்கோவன் அவர்களும் செயல்பட்டு வருகின்றனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பலகலையுடன் இணைந்து உத்தமமும் இம்மாநாட்டை நடத்தியுள்ளது.  28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் பல கருத்தரங்குகள், மென்பொருள் கண்காட்சியரங்குகள், கலந்துரையாடல்கள், பொதுமக்களுக்கு இணையத்தை அறிமுகம் செய்தல் எனப் பல நிகழ்வுகள் இம்மாநாட்டில் இடம்பெற்றிருந்தன.

பொதுமக்களுக்குத் தமிழ்க் கணிமை பற்றிப் பயிற்சி தருதல், பரப்புதல், பயிலரங்குகள் மூலம் இளைஞர்களை ஈர்த்தல் ஆண்டுதோறும் நடத்தும் உலகத் தமிழ் இணைய மாநாடுகள், தரப்பாடுகளையும் தொழில்நுட்பங்களையும் விவாதிக்கும் பணிக்குழுக்கள், யூனிகோடு, தமிழ் இணையக் கழகம், மற்றும் பன்னாட்டுத் தரப்பாடு நிறுவனங்கள், அரசு அமைப்புகளோடு ஊடாடுதல் மூலம் தமிழ்க்கணிமைக்கான முக்கியத் தேவைகளை உத்தமம் நிறைவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment