தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

9.12.12

வரலாறு படைக்கும் வரலாறு இணைய இதழ்

வரலாறு இணைய இதழின் தோற்றப் படம்
வரலாற்றுச் செய்திகளுக்குத் தனித்துவம் கொடுத்து வெளிவந்து கொண்டிருக்கும் இணைய இதழே ‘வராலாறு.காம்’.  `இணையம் வழி வளரும் வரலாற்றுப் பயணம்’  என்று இவ்விதழின் போக்கு விளக்கப்பட்டிருக்கிறது.  23.10.2012 வரை 88 இதழ்கள் இணையத்தில் விரிந்துள்ளன. தற்போது  90 ஆவது இதழ் வெளியிடப்பட்டுள்ளது.  இதுவரை படைத்த படைப்புகளின் எண்ணிக்கையும் சொல்லப்பட்டுள்ளது.

ஆகத்து 15, 2004ஆம் ஆண்டு திருவாளர்கள் சீத்தாராமன், இராம், இலாவண்யா, கமல், கிருபா சங்கர், கோகுல் என்பவர்களால் தோற்றுவிக்கப்பட்டது.  பெரிதும் இவர்களின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.  ஆசிரியர் குழுவாக இவர்களே செயல்படுகின்றனர்.  இவ்வாசிரியர் குழுவில் பெரும்பான்மையினர் வரலாறு முடித்துத் தேர்ந்த வல்லாளர்கள்.

தவறாமல் தலையங்கம் ஒன்று இடம்பெற்று சாட்டையடி கொடுக்கிறது.  ‘கதை நேரம்’ என்ற பகுதியில் கதையும் ‘கலையும் ஆய்வும்’ என்ற பகுதியில் தமிழகக் கலைகள் பற்றிய ஆய்வும் இடம்பெற்றுள்ளன.  `இலக்கிய ஆய்வும்’ இலக்கிய விரும்பிகளுக்காகப் படைக்கப்பட்டுப் பரிமாறப்படுகிறது.

இவ்விதழில் கட்டடக்கலை குறித்து கமலக்கண்ணன் என்பவர் தொடர்ந்து எழுதி வருகிறார்.  கதைநேரம் பகுதியை கோகுல் செதுக்கித் தருகிறார்.  கிருபாசங்கர் என்பவர் தளத்தின் வடிவமைப்புப் பணிகளைக் கவனித்துக் கொண்டு புதிய மென்பொருள் ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்.  இவரின் ‘கடலை மிட்டாய்’ என்கிற மென்பொருள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய தமிழ் எழுத்துக்களாக மாறி ஒருங்குறி வடிவம் கொள்கிறது.  எ.கலப்பை, என்.எச்.எம் எழுதிகளை போன்றது எனலாம்.
மொத்தத்தில் வரலாறு.காம் வாசிக்கத் தகவு பெற்ற வரலாற்றுச் செய்திப் பெட்டகம்.

No comments:

Post a Comment