தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

24.11.12

சிலம்பைப் பின்பற்றிய 2000 வாசகர்கள்

என்னுடைய சிலம்புகள் வலைப்பூ 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  இருப்பினும் அப்பொழுது வலைப்பூவைத் தொடங்கியது மட்டும் தான் நான் செய்த செயல்.  சிலம்புகள்.காம் என்ற (வணிக மற்றும் வியாபார நோக்கமற்ற) தளத்தை நிர்வகித்துக் கொண்டிருந்ததால் வலைப்பூவில் எழுதுவதைத் தவிர்த்தேன்.  தற்போது தான் (செப்டம்பர் 2012)வலைப்பூவில் என்னுடைய தடத்தினைப் பதியத் தொடங்கினேன்.  மூன்று மாதங்கள் தொடர்ந்து எழுதிய என்னுடைய பற்பல பதிவுகளை சற்றொப்ப இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் தொடர்ந்து படித்து வருகின்றனர். குறுகிய காலமான மூன்று மாதத்தில் என்னுடைய வலைப்பூவை இவ்வளவு வாசகர்கள் பின்பற்றியிருப்பது என் தமிழுக்கு நான் ஆற்றிய பணியின் சிறப்பே என நினைக்கிறேன்.

பேராற்றல் வழங்கும் தமிழ்மொழி குறித்து நான் யாத்த பல பதிவுகளைக் காண வருகை தந்த அனைத்து தமிழன்பர்களுக்கும் என்னுடைய நன்றியை இத்தருணத்திலே உரித்தாக்குகிறேன்.

அருகில் உள்ள கட்டுரை தொகுப்பு (இடது பக்கம்) என்னும் பகுதியைப் பார்த்தால் சிலம்பு வலைப்பூவில் கட்டுரை எழுதத் தொடங்கிய காலப்பகுதியை அறியலாம்.

No comments:

Post a Comment