தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

18.11.12

மதுரகவியாழ்வார்

மதுரகவியாழ்வார் திருக்குருகூர் அருகிலுள்ள திருக்கோளூரிலே சித்திரை மாதத்துச் சித்திரை நட்சத்திரத்திலே அவதரித்தவர்.  நம்மாழ்வாரின் சீடராகத் திகழ்ந்தார்.  அவருடைய பாசுரங்களைப் பரப்புவதில் நாட்டங்கொண்டிருந்தார். 

நம்மாழ்வாரைப் பற்றி “கண்ணிநுண் சிறுத்தாம்பு” எனப் பாடினார்.  திருமாள் மீது இவருக்கிருந்த அன்பைக் காட்டிலும் நம்மாழ்வார் மீது இவருக்கிருந்த அன்பே அதிகம்.

``தேவுமற்று அறியே குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே” என்று பாடினார்.  

இளம் வயதிலேயே இனிய கவிதைகளை இயற்றக்கூடிய ஆற்றல் கைவரப் பெற்றவர்.  இதனாலேயே ‘மதுரகவி’ என அழைக்கப்பட்டார்.  இவர் பாடிய `கண்ணிநுண் சிறுத்தாம்பு’ என்னும் பாமாலை பதினொரு பாசுரங்களே அடங்கியது.  இதுவே பின்னாளில் `சடகோபர் அந்தாதி’யைக் கம்பர் இயற்ற வழியாகியது.

செருக்குற்ற தமிழ்ப் புலவர்களுக்குப் பாடங் கற்பிக்க வேண்டி நம்மாழ்வார் இவரின் கனவில் தோன்றி பாடல் ஒன்றை எழுதி ஓலையில் கொடுத்திருக்கிறார்.  அவ்வோலையை மறுநாள் தன்னுடைய வாயிலில் கண்டெடுத்திருக்கிறார் மதுரகவியாழ்வார்.  அவ்வோலையில் நம்மாழ்வார் எழுதிய பாடலைத் தன்னிடம் போட்டியிட்டவர்கள் முன்னிலையில் படித்துக்காட்டி பொருள் கூறுமாறு செய்தார்.  அஃதாவது பாசுரத்தை மட்டும் ஏட்டில் எழுதிச் சங்கப்பலகையில் இட, அப்பலகை புலவர்களைப் பொற்றாமரைக் குளத்தில் வீழ்த்தி, அவ்வேட்டினை மட்டும் தாங்கி மிதந்தது.


1 comment:

  1. மதுரமான பகிர்வுகள் ..
    மகிழ்வுடன் பாராட்டுக்கள்..

    ReplyDelete