தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

13.9.12

திருநாவுக்கரசரின் நோன்பு


திருநாவுக்கரசரின் வடதளி உண்ணா நோன்பு:

திருநாவுக்கரசர் அவர்கள் பழையாறை என்னும் இடத்தை அடைந்தார்.  இவ்விடத்தில் இருந்தது வடதளி என்னும் கோயில்.  இக்கோயிலில் இருந்த சிவலிங்கத்தை சமணர் மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.  இதனை அறிந்த நாவுக்கரசர் அவ்விறைவனைக் கண்டாலொழிய உணவு உண்ணமாட்டேன் என்று அக்கோயிலின் முன்னே உண்ணா நோன்பை மேற்கொண்டார்.  அன்றிரவு அந்நாட்டை ஆண்ட மன்னனின் கனவில் சிவபெருமான் எழுந்து சிவலிங்கம் இருக்கும் இடத்தைக் காட்டினார்.  மேலும் அச்சிவலிங்கத்தை வடதளியில் வைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
  அரசன் தன்னுடைய பரிவாரங்களுடன் சென்று சிவலிங்கம் இருக்கும் இடத்தை அடைந்து அதனை மீட்டு வந்து வடதளிக்கோயிலில் நிறுவினான்.  இதனை அறிந்து நாவுக்கரசர் அகமகிழ்ந்து அக்கோயில் சென்று சிவனை வழிபட்டார்.

No comments:

Post a Comment