தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

27.9.12

திரு.வி.கவும் ஆங்கிலமும்

திரு.வி.க.வின் ஆங்கில அறிவு:
     திரு.வி.க அவர்கள், தான் ஆங்கில அறிவில் மெத்த புலமை பெறவில்லை என்பதை அவரே பலமுறை கூறியிருக்கிறார்.  ஆனாலும் அவருக்கு ஆங்கில அறிவு இல்லை என்று நாம் சொல்லிவிட முடியாது.  பல நேரங்களில் தான் பணியாற்றிய பள்ளியில் ஆங்கிலத்தில் கடிதம் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் நன்கு புலமை பெற்ற எவராவது அவர் கடிதம் எழுதும் போது  வந்தால் அவரிடமே அதனை ஒப்படைத்து கடிதம் எழுதும் படி கூறிவிடுவார்.

`சேக்சுபியர் மன்றம்’ என்னும் ஆங்கில மன்றத்தில் ஏராளமான ஆங்கிலக் கவிஞர்களின்
கவிதைகள் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்படும்.  இது நடக்கும் இடத்திற்கு திரு.வி.க அவர்கள் தன்முனைப்புடன் சென்று பார்வையாளராக அமர்ந்துகொள்வார்.
இரவீந்திரநாத் தாகூர் அவரிகளின் `கீதாஞ்சலிஎன்னும் நூலை தனியாகவே படித்துத் தேர்ந்திருக்கிறார் திரு.வி.க.  இது அவரின் ஆங்கிலப் புலமைக்கு எடுத்துக்காட்டாகும்.

No comments:

Post a Comment