தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

5.9.12

அறிவோம் நாயன்மாரை



இடங்கழி நாயனார்:
   கோ என்றொரு நாட்டில் உள்ள இடம் தான் கொடும்பாளூர்.  இவ்வூர் அந்நாட்டின் தலைநகரமாகத் திகழ்ந்தது.  இந்நாட்டை ஆண்ட குறுநில மன்னன் இடங்கழியார்.  இவர் மக்கள் மீதும் சிவபெருமான் மீதும் ஏக அன்பு கொண்டு விளங்கினார்.  சிவபெருமானுக்கு நாடுமுழுவதும் பூசைகள் நடைபெற வழிவகுத்தார்.  சிவனின் ஆழ்ந்த தொண்டனாகத் திகழ்ந்தார்.  சைவ சமயம் நன்கு செழிப்புடன் விளங்கக் காரண்மாக விளங்கினார்.
     இவ்வாறு அவர் அரசாட்சி புரிகையில் அவருடைய நாட்டில் சிவனடியார்களுக்கு உணவு படைக்கும் ஒரு தீவிர சிவபக்தன் நாள்தோறும் இதனைச் செய்வது வழக்கம்.  ஒரு நாள் கூட மறந்தும் உணவு கொடுக்காமல் இருந்ததிலன்.  சோதனையாக பண்டங்கள் அவனுக்கு எங்கும் கிடைத்தில.  என்செய்வது என்று திக்காடி நின்றான்.  சிவனடியார்களுக்கு உணவு படைப்பது தான் தன்னுடைய சிவப்பணி என்றே வாழ்ந்து வந்தான்.  இதிலிருந்து எப்படி தன்னுடைய சைவ நெறிக்கொள்கையை மாற்றிக்கொள்வது என்று எண்ணி அரண்மனையிலிருந்த தானியக் கிடங்கில் நெல்லை எடுத்து வந்து சிவனடியார்களுக்கு உணவு சமைக்கத் திட்டமிட்டான்.  இதற்காக அரண்மனைக்குச் சென்று எவரும் அறியாமல் நெல்லை எடுக்க முற்படும் போது இரவு நேரக் காவலாளியிடம் அகப்பட்டுக் கொள்கிறான்.  பின்னர் மன்னர் இடங்கழி நாயனாரிடம் அழைத்துச் செல்லப்படுகிறான்.  திருடியதன் நோக்கம் யாது என அவர் வினவ அவனும் உரிய காரணத்தைக் கூறினான்.  காரணத்தைக் கேட்ட மட்டில் அடடா என்னே உன் சைவப் பற்று என்று புகழ்ந்து சிவனடியார்களுக்கு உணவளிக்க ஏராளமான தானியங்களையும் செல்வங்களையும் வழங்கி சிவத்தொண்டு சிறக்க வாய்ப்பு நல்கினார்.

No comments:

Post a Comment