தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

19.10.12

செம்மொழி மாநாட்டு மீள் கண்ணோட்டம்


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நினைவுகள் 1


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு

  • நம் தமிழ் மொழியை நடுவணரசு 12.10.2004 ஆம் நாளன்று செம்மொழியாக அறிவித்தது.
  • கொங்கு தமிழ் கொஞ்சி விளையாடும் கோவை மாநகரில் உலகத் தமிழ்ச் செம்மொழி முதல் மாநாடு 23.06.2010 முதல் 27.06.2010 வரை சிறப்புடன் நடைபெற்றது.
  • ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்என்னும் மையக்கருத்தினை வெளிப்படுத்தி நிற்கும் வகையில் வள்ளுவரின் திருவுருவச் சிலை தாங்கிய சின்னம் உருவாக்கப்பட்டது.
  • கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் இதே மையக் கருத்தை அடியொட்டி செம்மொழிப் பாடல் ஒன்று உருப்பெற்று இசைக்கப்பட்டது.
  • இப்பாடல் தொலைக்காட்சிகளில் மாநாடு நடைபெறுவதற்கு முன்பாகப் பன்முறை ஒளிபரப்பப்பட்டது.  இப்பாடலுக்கு ஏ.ஆர். இரகுமான் இசையமைத்திருந்தார்.
  • மாநாட்டிற்காக கொடிசியா வளாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • கவியரங்கம், ஆய்வரங்கம், பட்டிமன்றம், கலைநிகழ்ச்சி என ஒவ்வொரு நாளும் கோலாகலப்பட்டது மாநாடு.
  • புத்தகக் கண்காட்சி, இணையத் தளக்கண்காட்சி, பொதுக்கண்காட்சி, ஊடக அரங்குகள் முதலியவற்றிற்கு ஏற்பாடாகியிருந்தது.
  • மாநாட்டின் முதல் நாள் எழிலார் பவனி நடைபெற்றது.  ‘இனியவை நாற்பதுஎனும் பெயரில் அழகு ஊர்திகள் அணிவகுத்து வந்தன.  கலைக்குழுவினர் ஒவ்வொரு ஊர்திக்கும் முன்பு நடனம் புரிந்தனர்.
  • கொடிசியா வளாகத்தில் ஆயிரம் அடி நீளமும், நானூற்று நாற்பது அடி அகலமும் கொண்டு மாபெரும் பந்தல் அமைக்கப் பெற்றிருந்தது.  இதுவரை அசியாவிலேயே இம்மாதிரியான பந்தல் அமைக்கப்படவில்லை எனக் கூறுமாறு அப்பந்தல் காட்சியளித்தது.
  • 80 அடி உயர ராசகோபுரம் விண்ணை முட்டி நிற்குமாறு அமைக்கப்பட்டது.  ஐம்பதினாயிரம் பேர் அமர்ந்து காணும் வகையில் இருக்கைகள் ஏற்பாடாகியிருந்தன.
  • மாநாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தின் அளவு எட்டு ஏக்கர் முப்பத்தைந்தாயிரம் சதுர அடி ஆகும்.
  • தமிழைச் சிறப்பிக்க இருபத்து மூன்று ஆய்வரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.  இவை ஒவ்வொன்றும் பண்டைத் தமிழறிஞர்களின் பெயரைத் தாங்கி நின்றன.
  • ஆய்வரங்குகளில் 53 தலைப்புகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 239 நிகழ்வுகள் தயாரிக்கப்பட்டு 913 ஆய்வுக்கட்டுரைகள் படிக்கப்பட்டன.
  • 913 ஆய்வுக்கட்டுரையில் 152 கட்டுரைகள் வெளிநாட்டுத் தமிழறிஞர்களால் படிக்கப்பெற்றவை.
  • ஐம்பது நாடுகளிலிருந்து 840 பேர் உட்பட 2605 தமிழறிஞர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.(பாகம் 2 வரும்)

1 comment:

  1. தமிழ் நாட்டைப் பழைய சென்னிலைக்குக் கொண்டுவர வேண்டுமாயின், தமிழ்மக்கள் பலதிற உழைப்புக்களில் தலைப்படல் வேண்டும். தமிழ் மக்கள் முதலாவது தங்கள் மொழியினிடத்துப் பற்றுக்கொள்ளல் வேண்டும் - திரு.வி.க

    ReplyDelete