தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

21.10.12

துணிவு மிக்க நா.இளங்கோ


முனைவர்.நா.இளங்கோ

`காலடியில் தலை எனும் கவிதை நூலானது 1985ஆம் ஆண்டு முனைவர் நா.இளங்கோ அவர்களால் எழுதி வெளியிடப்பட்டது.  இக்கவிதை நூலில் பிரபஞ்சனின் அணிந்துரை இடம்பெற்றிருந்தது.  அவ்வணிந்துரையில் இந்நூலைப் பற்றி அணிந்துரைக்கும் போது ‘வசனத்தை ஒடித்துப் போட்டுஎன்று பிரபஞ்சன் குறிப்பிட்டிருந்தார்.  இதைப் படித்தவுடன் எனக்கு மிகுந்த வருத்தம் மேலிட்டது.  ஒரு எழுத்தாளரின் முதல் நூல் அறிமுகம் நன்முறையில் அமைதல் வேண்டும்.  அப்படி இருக்கையில் முதல் நூலிலேயே இப்படியொரு அணிந்துரை வழங்கியிருக்கிறார் பிரபஞ்சன்.  இதை எப்படி முனைவர் நா.இளங்கோ ஏற்றுக்கொண்டு அப்படியே வெளியிட்டார் என்று எனக்குள் ஆயிரம் தேடுதல்கள்.  இது குறித்து முனைவர் இளங்கோவிடம் அவருடைய மாணவன் என்கிற உரிமையில் கேட்டு மின்னஞ்சல் செய்திருந்தேன்.  அதற்கு அவர்,

“அன்பு மாணவ நண்பர் சதிஷ் அவர்களுக்கு,

1985 இல் நான் எழுதி வெளியிட்ட காலடியில் தலை என்ற கவிதை நூலை 2011 இல் வாசிக்க வாய்ப்பு ஏற்பட்டமை குறித்து மகிழ்ச்சி.

பிரபஞ்சன் எழுதிய கருத்துக்களை நேர்மையோடு அப்படியே வெளியிட்டேன். அதுவே அந்த நூலுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. மற்றவர்கள் அந்நூலைப்பாராட்டவே செய்தனர்.” என்று தெரிவித்தார்.  இஃது அவருக்கிருந்த மனத் துணிவை வெளிப்படுத்திக்காட்டும் வாய்ப்பாக  நினைக்கிறேன்.

`காலடியில் தலை’ என்னும் அக்கவிதை நூலினை வாசிக்க நேரும் பொழுதெல்லம் இளங்கோவின் உள்ளத் தெளிவும் துணிவும் ஒருங்கே வந்து என் கண் முன் நின்று துணிவைத் தந்து செல்கின்றன.
 

No comments:

Post a Comment