தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

4.10.12

நம் மொழியின் திறன் கண்டீரோ!

 உயிர் வகைப்பாடு 


ஐந்திலக்கணங்களை ஒருங்கே எடுத்துக்கூறும் முகத்தான் அமையப்பெற்ற ஓர் இலக்கண நூல் தான் ‘நன்னூல்’. இதனை சீயகங்கன் என்னும் மன்னன் வேண்ட பவணந்தி என்னும் முனிவர் இயற்றினார்.
இக்கால அறிவியல் அறிஞர்கள் ஆய்ந்து கூறிய பலவற்றை இம்முனிவர் அன்றே சொல்லிச் சென்றுள்ளார்.  அறிவுகளின் அடிப்படையைக் கொண்டு உயிரினங்கள் சில பாகுபாடுகளுக்கு ஆளாயின.  ஊர்வன, நடப்பன என்பவை இவற்றுள் சிலவகையின.
“மெய்ந்நா மூக்கு நாட்டம் செவிகளின்
ஒன்றுமுதலாக் கீழ்க்கொண்டு மேல் உணர்தலின்
ஓர் அறிவு ஆதியா உயிர் ஐந்தாகும்”(நன்னூல்-444) என்று சுட்டுகிறார் பவணந்தி முனிவர்.
உடல், நாக்கு, மூக்கு, கண், காது என்னும் ஐந்து பொறிகளாலும், மெய்யினால் உணரும் உணர்ச்சி ஒன்று முதலாகக் கீழ்ச் சொன்ன உணர்ச்சியும் கொண்டு சுவை, நாற்றம், ஒளி, ஓசை என வரும் புலன்கள ஒவ்வொன்றாக அறிதலால், ஓர் அறிவு முதலாக ஐந்து வகையாகும் என்கிறார்.
            புல், மரம் முதலியன மெய்யினால் தொட்டுத் தொடுதல் உணர்வை அறியும் ஓர் அறிவு பெற்றவையாம்.
           சிப்பி, சங்கு முதலியன மெய் அறிவு+சுவை அறியும் அறிவுடன் ஈரறிவுயிராம்
   செல், எறும்பு முதலியன மெய் அறிவு+சுவை அறிவு+ நாற்றம் (மணம்) அறியும் அறிவைப் பெறுகின்றன.  ஆதலால் இவை மூவறிவுயிர்களாயின.
           தும்பி, வண்டு முதலியன மெய் அறிவு+சுவை அறிவு+ நாற்றம் (மணம்)+ கண் அறிவு(கண்ணால் பார்த்து அறிதல்) என்னும் நான்கு அறிவு பெற்றவை நாலறிவு ஜீவிகளாயின.
           தேவர், மனிதர், நரகர், விலக்குகள், பறவைகள் முதலானோர்-முதலியன மேற்சொல்லப்பட்ட நான்கறிவுடன் காதால் கேட்கும் அறிவையும் பெற்று ஐயறிவுயிர்களாயினர்.
மனிதன் ஆறு அறிவு படைத்தவன் என்றும்,  ஆறாவது அறிவாக பகுத்தறிவைக் குறிப்பிடுகிறோம்.  இது நாமாக வருவித்துக் கொண்டது.(மாற்றுக் கருத்துக்கும் இடம் உண்டு)
ஏன் அவ்வாறு நாம் மற்ற உயிர்களினின்று தனித்து நின்றோம்?  மற்ற விலங்குகள், பறவைகளின் ஒழுக்கத்தை விட உயர்ந்த ஒழுக்கத்தை நாம் பெற்றிருத்தலே இதற்குக் காரணம்.

No comments:

Post a Comment