தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

20.10.12

தமிழ் செம்மொழி மாநாட்டு நினைவுகள் 2


செம்மொழி மாநாட்டு மீள் கண்ணோட்டம் - 2



  • செம்மொழி மாநாட்டோடு இணைந்து ஒன்பதாவது உலகத் தமிழ் இணைய மாநாடும் நடத்தப்பட்டது.  இதற்காக 124 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
  • தகவல் தொழில் நுட்பத்தை எவ்வாறெல்லாம் பயன்படுத்தி நந்தமிழை வளப்படுத்தலாம் என ஆராயப்பட்டு முடிவும் எடுக்கப்பட்டது.


பல்வேறு கண்காட்சிகள்:



சிற்பக்காட்சி, ஓலைச்சுவடி, செப்பேடு, கல்வெட்டு, அகழ்வாராய்ச்சியில் எடுக்கப்பட்டவை, வனம் சார் பொருள்கள் என எழுநூற்றுக்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
கபிலர் குறிப்பிடும் தொண்ணூற்று ஒன்பது மலர்களைப் பற்றிய படக்காட்சித் தொகுப்பு மாநாட்டுக்கு வந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

விருது:

  • அஸ்கோ பார்ப்போலா என்ற பின்லாந்து நாட்டைச் சார்ந்தவருக்குக் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுவழங்கப்பட்டது.  இந்த விருது 10 இலட்ச ரூபாய் மதிப்புடையது.  இதோடு ஐம்பொன்னாலான திருவள்ளுவர் உருவச் சிலையும் வழங்கப்பட்டது.
  • சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கிய சென்னைப் பனேசியா மென்பொருள் நிறுவனத்தின் உரிமையாளர் திரு.விசயனுக்கு வழங்கப்பட்டது.  இவ்விருது ஒரு இலட்சத்துடன் பாராட்டுச் சான்றிதழ் அடங்கியது.

  • செம்மொழித் தமிழ் மாநாட்டையொட்டி ‘செம்மொழி மாநாட்டுக்கான அஞ்சல் தலைவெளியிடப்பட்டது.  இது திருவள்ளுவர் நிற்பது போன்ற தோற்றத்துடன் உருவாக்கப்பட்டது.  இதோடு ‘குமரகுருபரர் சுவாமிகள்அஞ்சல் தலை, மொழியறிஞர் ‘இராபர்ட் கால்டுவெல்அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டன.

தீர்மானங்கள்:
  • தமிழ் வளர்ச்சிக்காக நூறு கோடி நிதியுதவி வழங்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
  • மதுரையில் தொல்காப்பியர் உலகத் தமிழ் செம்மொழிச் சங்கம் அமைத்தல்.
  • பள்ளி, கல்லூரிகளில் செம்மொழி பற்றிய பாடம் இணைத்தல்.
  • தமிழ் வழியில் கல்வி கற்பவர்களுக்கு அரசுப் பணி வாய்ப்பில் முன்னுரிமை வழங்குதல்.
  • நடுவணரசில் தமிழை ஆட்சிமொழியாக்கல்
  • சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கல்.
  • தமிழ் மொழி வளர்ச்சிக்கும் ஆய்வுக்கும் தேவையான அரசுக் கொடை வழங்கல்.
  • தேசியக் கல்வெட்டியல் நிறுவனத்தைத் தமிழகத்தில் அமைத்தல்.
  • பூம்புகார், குமரிக்கண்டம் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சிச் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.
  • தமிழகத்தின் அட்சிமொழி மாநாட்டை நினைவு கூரும் வகையில் நூறு கோடி செலவில் செம்மொழிப் பூங்காவும் மேம்பாலம் அமைத்தல்.
  • தமிழ் இலக்கியப் படைப்புகளைப் பிற மொழியிலும், பிற மொழி இலக்கியங்களைத் தமிழிலும் மொழி பெயர்க்கச் செய்தல்.



No comments:

Post a Comment